ramesh pathirana 800x425 1
செய்திகள்அரசியல்இலங்கை

இரசாயன உரங்களுக்கு மானியம்!

Share

இரசாயன உரங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்  மானியம் வழங்குவதற்கு அல்லது விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

காலி, நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது உலக சந்தையில் உரங்கள் மட்டுமின்றி எரிபொருள், பால்மா, சீமெந்து, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் உற்பத்திப் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் எமது நாட்டிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. உலகில் எந்த அரசும் தனது ஆட்சியில் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களை வரிசையில் நிற்க வைக்க விரும்புவதில்லை.

இந்த ஆண்டு பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இரசாயன உரங்கள் மீதான தடை நல்ல நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தேயிலை தொழிற்துறை உட்பட ஏனைய துறைகளுக்கு அதை தாங்க முடியவில்லை. ஆனால் தற்போது இரசாயன உரங்கள் பெறப்படுகின்றன.

ஆனால் 50 கிலோ உர மூட்டை ரூ.7,200 வாக காணப்படுகின்றது. அதை மக்களால் வாங்க முடியாது. எனவே  உடனடியாக நிவாரணம் வழங்க முடியாவிட்டாலும், முறையாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் உரத்திற்கான மானியத்தினை வழங்குவோம்.  அதுமட்டுமின்றி உர விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேயிலை தொழிற்துறை 2020 ஆம் ஆண்டளவில் 279 மில்லியன் கிலோகிராம் வளர்ச்சியைக் காட்டியது.  ஆனால் உர நெருக்கடி இருந்த போதிலும் கடந்த வருடம் 305 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி கிடைத்துள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.  தேயிலை பயிரிட விரும்பும் எவருக்கும் வசதிகள் செய்து தரப்படும்.

தேயிலை செடிகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அதிக நிழல் தரும் செடிகள், குட்டை நிழல் செடிகள், டொலமைட் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...