Vaccine01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்த களமிறங்கிய இராணுவம்!!

Share

ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ், நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் 03ம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

Vaccine

ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலும் பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....