karthinal
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

உண்மை அம்பலமாவதைத் தடுக்க முடியாது: பேராயர்

Share

ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு திட்டமிடப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் வெளிவரும்.

ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க இயலாது. ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்தே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் இந்தியாவின் உளவு அமைப்பான ரோ அமைப்பு வழங்கிய தகவல்கள் சிலவற்றை, உள்நோக்கம் கொண்ட சக்திகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளன என்பதும் புலனாகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுப்பதற்கு சில அதிகாரிகள் முயன்றார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் அதனை ஆழமான புதைகுழிக்குள் தள்ளிவிட்டனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....