நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

Share

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில் செய்யும் 27 வயதான இந்த இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக அவர் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்தார்.

இலங்கைக்கு வந்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது தாயும் இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத் தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை அந்தப் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 96
உலகம்செய்திகள்

நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமி: ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினரின் வரலாற்றுச் சாதனைப் புகைப்படம் வெளியீடு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis...

Untitled 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லக்விஜய மின் நிலைய நிலக்கரி கொள்முதல்: விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்தும்,...

Untitled 94
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு நெருக்கடி: மக்களுக்குப் பாரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில், நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால்...

Untitled 93
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விழா மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடையற்ற மின்சாரம்: அமைச்சர் விஜித ஹேரத் விசேட அறிவிப்பு!

இவ்வாண்டு நடைபெறவுள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாக்கள் மற்றும் ஏனைய கொண்டாட்டங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி...