நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் சுமார் இரண்டு அடி நீளமான சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தையின் சடத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறுத்தையின் உடலில் காயங்களும் காணப்படும் நிலையில், சிறுத்தை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது மனிதர்களால் கொல்லப்பட்டதா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment