Mannar gas 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: கூலித்தொழிலாளியின் வீடு சாம்பலானது!

Share

எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

தரவான் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில், எரிவாயு அடுப்பு வெடித்தமையைத் தொடர்ந்து குறித்த பெண், அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mannar gas 01

இதேவேளை குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசிப்பதுடன், பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Mannar gas

தற்போது வீடு முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 79371bbe21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய கல்விச் சீர்திருத்தத்தை உடனே அமல்படுத்து: கல்வி அமைச்சை முற்றுகையிட்ட தரம் 6 மாணவர்களின் பெற்றோர்கள்!

தரம் 6-இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு...

women arrest 796x445 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புறக்கோட்டையில் பரபரப்பு: பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்து உலாவந்த பெண் ஒருவர்,...

AEQ6KC5NNRKZPBQY5NCRBKJPJY
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் அமெரிக்காவின் அதிரடி: வெனிசுவேலாவின் 6-வது எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு!

வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில்...

image 870x 690020e21361a
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்: 2025-இல் மட்டும் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு...