jaffna univercity
இலங்கைபிராந்தியம்

பகிடிவதையில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவன் அதிரடியாக வெளியேற்றம்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது, விஞ்ஞான பீட மாணவன் ஒருவர் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிந்து – மறு அறிவித்தல் விடுக்கும் வரை, குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாது என தடையுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உடனடியாக குறித்த மாணவனை விடுதியில் இருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலையின் விஞ்ஞான பீடாதிபதியால், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவனுக்கே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில், பல்கலையின் புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர் நலச்சேவை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை விடுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...