Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணி அவசியம்! – விமல் வீரவன்ச

Share

” எதிரணி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, பலமான கூட்டணியாக பயணிக்க வேண்டிய தருணத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இது.

எனவே, இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது. அதேபோல தனிநபர்மீது பழிகளை சுமத்தாமல், உண்மை நிலை அறிந்து விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.” – எனவும் விமர் வீரவன்ச குறிப்பிட்டார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேன அரசை விமர்சிப்பது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது 2015 முதல் 2017வரையான காலப்பகுதியில் ஆற்றிய உரையாக இருக்கலாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...