Crocodile
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீன்பிடிக்கப்போய் முதலைக்கு இரையான மீனவர்!

Share

மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை குறித்த மீனவரைப் பிடித்து இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மண்டானை திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி ( 55 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...