Crocodile
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீன்பிடிக்கப்போய் முதலைக்கு இரையான மீனவர்!

Share

மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை குறித்த மீனவரைப் பிடித்து இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மண்டானை திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி ( 55 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...