velukumar
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம்! –

Share

2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் ஊழல், மோசடிகளும், தவறான முடிவுகளும், தெளிவற்ற கொள்கைகளுமே பிரதான காரணங்களாகும். அடுத்த மாதமளவில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர்கள் ‘அறிக்கைகளை’ வெளியிட்டு அரசியல் நடத்திவருவதுடன், உறுதியான அறிவிப்புகள் இன்றி ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

இந்த நாட்டை பட்டினியை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் என அரசிடம் வலியுறுத்திக்கூறிக்கொள்கின்றோம். முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள். நாட்டை பொறுப்பேற்று நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அதற்கான கொள்கைத் திட்டங்கள் எம் வசம் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...