Sajith 1
இலங்கைஅரசியல்செய்திகள்

அடுப்பில் நெருப்பு எரியவில்லை: மக்களின் மனதில் தான் எரிகிறது!!

Share

நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு வழங்கியுள்ளது.

அதேபோல புத்தாண்டுப் பரிசாக தற்போது கையிருப்பிலுள்ள டொலர்களையும் செலவு செய்து கடன் தவனையை அரசாங்கம் செலுத்தவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் இரண்டாவது விஜயத்தை நேற்று (27) அம்பலாந்தொட்டையில் ஆரம்பித்து மக்களை சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன் “குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கினார்.

மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாபியாவின் வஞ்சகர். மக்களோடும், ஏற்றுமதியாளர்களோடும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த நபரொருவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ ,மொட்டு பொருளாதார சீரழிவின் பிரதான சூத்திரதாரி என்றும் கூறினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...