காரைநகர் பிரதேச சபைக்கு 10இல் புதிய தவிசாளர் தெரிவு
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் காரைநகர் பிரதேச சபை பாதீடு தோல்வி!!

Share

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் இயற்கை எய்தியமையிட்டு புதிய தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் சமர்ப்பித்த  முதலாவது வரவுசெலவுத்திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று (21) இரண்டாவது பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களுக்கும் இடையில் காராசார விவாதம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த 3 வாக்களித்திருந்தனர். எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த 3 அங்கத்தவரும் ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்த 2வரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து ஒருவாக்கால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து தவிசாளர் பதவியிழந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....