WhatsApp Image 2021 12 14 at 5.23.36 AM e1639439670416
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு! – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் (வீடியோ)

Share

யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப் பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற நிலையில் முள்ளி ஐய்யங்கண்டி மயானத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்துக்கு அருகாமையிலேயே வெடிப்பு ஏற்பட்டு வீதி கீழ் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனூடாக ஒரு வழிப் பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது.

அதனூடக பாரவூர்திகள் தொடர்ந்தும் பயணிப்பதால் முற்றான பயணத்தடை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் ஆபத்தான பயணமாக அமைந்து காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...