Pavi
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் போக்குவரத்து திட்டம்!!

Share

அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர்,

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

இச் செயலியின் மூலம் மக்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.

இதேவேளை கொழும்பில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டியை விரைவில் அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்து வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...