Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

பீல்ட் மார்ஷல் பதவி மைத்திரியின் சொத்து அல்ல: சரத்பொன்சேகா கொந்தளிப்பு!

Share

எனக்கு திறமை, தகைமை இருப்பதால் தான் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய சரத் பொன்சேனா எம்.பி., பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வெளிசேகர வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.

” எனது குணம் பற்றி தெரிந்ததால்தான் நல்லாட்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படவில்லை என சரத் வீரசேகர கூறினார். அது உண்மைதான். ஏனெனில் எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தால் தவறிழைத்தவர்களை தப்பிக்க விட்டிருக்கமாட்டேன்.

சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்கினால், பொன்சேகா தன்னைதான் முதலில் கைது செய்வார் என மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் அன்று அச்சம் வெளியிட்டிருந்தார். எனவே, பதவி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளவில்லை.” -என்றார்.

இதன்போது குறுக்கீடு செய்த சாந்த பண்டார எம்.பி.,

” மைத்திரிபால சிறிசேனதான் உங்களுக்கு பீல்ட்மார்ஷல் படடத்தை வழங்கினார். அந்த நன்றிகூட உங்களுக்கு இல்லையா” என கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர்,

” ஜனாதிபதி பதவியை வகித்த நபர், எனக்கு தகைமை இருந்ததால் அதனை வழங்கினார். பீல்ட்மார்ஷல் பட்டம் என்பது மைத்திரியின் பொலன்னறுவையில் உள்ள சொத்து அல்ல.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...