FGAVPt0UUAMUAao
செய்திகள்இலங்கைவிளையாட்டு

தம்புள்ளையை 8 விக்கெட்களால் வீழ்த்தியது ஜப்னா!!!

Share

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று(7) பிற்பகல் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக நுவனிந்து பெர்னாண்டோ 23 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் சார்பில் வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லக்மால் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 111 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் 12.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கினை கடந்தது.

ஆரம்ப வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்னாண்டோ 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க டாம் கோஹ்லர்-காட்மோர் 45 ஓட்டங்களுடனும், சோயிப் மலிக் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவானார்.

#Sports

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....