பிரான்ஸிக்குள் ஒமிக்ரொன் புகுந்துள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரொன் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திரிவு அடைந்த புதிய ‘ஒமிக்ரொன்’ வகை கொரோனா முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்றவகை கொரோனா வைரஸைவிட இது அதிகம் தாக்கும் திறன் உடையதென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பயணக் கட்டுப்பாடு, வைத்திய பரிசோதனைகள் என பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் நேற்று முதல்முறையாக’ஒமிக்ரொன் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்தியாவிலும் இருவருக்கு ஒமிக்ரொன் வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் மாகாணப் பகுதியில் ஒருவருக்கு ‘ஒமிக்ரொன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்றுடையவர் நைஜீரியாவில் இருந்து வந்ததாகவும் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
#world
Leave a comment