வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்குப் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதனால், மன்னார் மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment