bl 720x375 1
விளையாட்டுசெய்திகள்

34 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை

Share

34 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜோசுவா டி சில்வா 20 ஓட்டங்களுடனும் ஜோமேல் வொரிக்கான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 34 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஜமைக்காவில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 217 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலாம் 56 ஓட்டங்களையும் பஷீம் அஷ்ரப் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரோச் 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் ஓர் விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றது.

கெய்ரன் பவல் மற்றும் போனர் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர். கிரைஜ் பிரத்வெயிட் 97 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 21 ஓட்டங்களுடனும் ஜெரமைன் பிளக்வுட் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

கெய்ல் மேயர்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஜேஸன் ஹோல்டர் 58 ஓட்டங்களுடனும் கெமார் ரோச் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், பஷீம் அஷ்ரப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இன்று போட்டியின் மூன்றாவது நாளில், மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...