Coal mining fire in Russia
உலகம்செய்திகள்

சுரங்கத்திற்குள் பாரிய தீ -52 பேர் பரிதாபமாக சாவு

Share

சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

இச் சுரங்கம் தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக பல குழிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இக் குழிகளின் ஒரு குழியின் முன் பகுதியில் இருந்த நிலக்கரி தூணில் திடீரென தீப்பிடித்ததால், அத்தீ சுரங்கம் முழுவதும் பரவியது.

இத்தீயில் 52 தொழிலாளர்கள் கருகி சாவடைந்தனர் .

பலர் படுகா யம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவ் விபத்து தொடர்பில் சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ரஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தல் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....