WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை சீண்டினால் விளைவுகள் விபரீதமாகும்!! – தயாசிறி எச்சரிக்கை

Share

“எமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்தும் சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

” ஒரு முறை அல்ல, இரு தடவைகள் அல்ல – எமது தலைவரை தொடர்ச்சியாக தாக்கி பேசும் செயலில்தான் மஹிந்தானந்த அளுத்கமகே ஈடுபட்டு வருகின்றார். சேறுபூசும் விதத்தில் போலிக்கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

அவர் சாக்கடையை கிளறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நன்றாகவே கிளறட்டும், அவ்வாறு கிளறும்போதுதான் குப்பைகள் வெளிவரும்.

நாம் அரச பங்காளிகள். அரசை காக்கவே பாடுபடுகின்றோம். சிலவேளை விமர்சனங்களை முன்வைக்கின்றோம். அது ஜனநாயக உரிமை. தாக்குவதாக இருந்தால் எம்மை தாக்குங்கள். எமது தலைமைமீது கைவைக்க வேண்டாம். எம்மால் பொறுமை காக்க முடியாது.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...