accident 8 750x375 1
செய்திகள்இந்தியாஇலங்கை

நாகாவதி முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் மோட்டார் வண்டியில் பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதி முகாமில் வசித்து வரும் அருண்குமார் (26) என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நாளை நல்லடக்கம் செய்யப்படஉள்ளது. இச் சம்பவம் நாகாவதி முகாம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் எனவும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Image 2021 11 22 at 8.08.53 PM

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...