20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதைப் போல வரவு செலவு திட்டத்துக்கும் ஆதரவு வழங்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலிசப்ரி ரஹீம் அறிவித்துள்ளார்.
புத்தளம் தில்லையடி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (21) பார்வையிட வருகை தந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
எனவே, 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதைப் போலவே, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கும் ஆதரவாக வாக்களிப்பேன் எனவும் தெரிவித்தார்.
சவால் மிக்க இந்த கால கட்டத்திலும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் எமது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு நிவாரணம் அடங்கிய பட்ஜட் பொதியை வழங்கியிருக்கிறார்கள்.
#SriLankaNews
Leave a comment