China Ship
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவின் சேதனப்பசளை விவகாரம்: மெதுவாகப் பின்வாங்கும் இலங்கை!-

Share

சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

இந்தநிலையில் புதிய பசளைகளைக் கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

இந்த விவகாரத்தினால் ராஜதந்திர உறவுகளை பாதிக்க இடமளிக்கமுடியாது. அனுமதியின்றி இந்தக்கப்பல் வந்துள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டது.

வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டதால், கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக சீன நிறுவனம் கூறியுள்ள நிலையிலேயே தற்போது முரண்பாடு எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...