China Ship
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவின் சேதனப்பசளை விவகாரம்: மெதுவாகப் பின்வாங்கும் இலங்கை!-

Share

சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

இந்தநிலையில் புதிய பசளைகளைக் கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

இந்த விவகாரத்தினால் ராஜதந்திர உறவுகளை பாதிக்க இடமளிக்கமுடியாது. அனுமதியின்றி இந்தக்கப்பல் வந்துள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டது.

வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டதால், கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக சீன நிறுவனம் கூறியுள்ள நிலையிலேயே தற்போது முரண்பாடு எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...