Vegetables 1 scaled
செய்திகள்இலங்கை

எகிறும் மரக்கறி விலை – கட்டுப்படுத்த முடியாது வியாபாரிகள் திண்டாட்டம்

Share

நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால் மரக்கறிகளின் விலைகள் கட்டுக்கடங்காத வகையில் இன்னும் அதிகரிக்கலாம் என மரக்கறி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் டிசெம்பர் இறுதி வரை தொடரலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால்,
சமைத்த உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...