1
செய்திகள்உலகம்

தீயில் கருகிய தமிழ் குடும்பம் -பரிதாபமாக 4 பேர் சாவு!!

Share

இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் .

இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே சாவடைந்துள்ளனர் .

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களது வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு சென்ற போதும் , வீட்டிலிருந்த 4 பேரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சாவடைந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பிய போது அவரின் கால்கள் உடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.

தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

இச்சம்பவத்தல் அக்குடியிருப்பு சோகத்தில் மூழ்கியுள்ளது.

இக்குடும்பத்தினர் அந்த வீட்டை 3 மாதங்களின் முன்னர்தான் கொள்வனவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவடைந்த இளம் தாயின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தா நிலையில் அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாவடைந்தவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வெளியில் சோகத்தில் உறைந்துள்ளார்கள் அத்தோடு அந்த பகுதி மக்களும் அவ் வீட்டுக்கு முன் மலரஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...