Vistara Airlines2
செய்திகள்இந்தியாஇலங்கை

மீண்டும் ஆரம்பித்த விமான சேவை – தேயிலை பொதிகளுடன் வரவேற்பு

Share

கொவிட் தொற்றுநோய் காரணமாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திய பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இன்று புதுடெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸின் முதல் விமானம் (UK-138) (A320-NEO) புது டெல்லியில் இருந்து புறப்பட்டு 138 பயணிகளுடன் இன்று காலை 10.10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தை வந்தடைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நீர் பீரங்கி மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.

பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்கு சிலோன் தேயிலை பரிசு பொதிகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும்‚ விஸ்தாரா ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 3 விமான சேவைகளை நடத்தவுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் கொழும்பில் இருந்து மும்பை மற்றும் புதுடெல்லி இடையே தனது தினந்தோறும் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vistara Airlines Vistara Airlines2Vistara Airlines3 Vistara Airlines4

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...