Gottabhayarajapaksha
செய்திகள்அரசியல்இலங்கை

அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடப்போகிறாரா கோட்டா?

Share

நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல.

ஆனால், மக்கள் அணிதிரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டி வரும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் 05 ஆம் நாளான இன்று உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முறையாக செயற்படாவிட்டால், தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினார் அவர்களின் ஆர்ப்பாட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு கற்பித்துள்ளனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

Kumarawelgama

127 உறுப்பினர்களுக்கும் பார்க்க மக்களின் எதிர்ப்பு பலமானது. அவர்கள் அணிதிரளும் போது அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல நேரிடும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பொய்யான எப்.சி.ஐ.டி ஒன்றை நியமித்து அப்போது எதிர்த்தரப்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்தார்கள். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் சிறைப்பிடித்தார்கள். பல்வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

சிறையிலிருக்கும்போது அவரை நானும் நேரில் சென்று சந்தித்திருந்தேன். ஆகவே அவரின் மனதில் கட்டாயம் வைராக்கியம் இருக்கும். மக்கள் இந்த அரசாங்கத்துக்கு சாபம் விடுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...