image 70e24042f0
செய்திகள்அரசியல்இலங்கை

ஞானசாரதேரரை பதவியிலிருந்து நீக்குங்கள்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

Share

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவரை  அப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16) விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது எனவும் சபையில் வினாக்களை எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை அரசாங்கம் தடுத்து வருகிறது.

நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் என்றும்
தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக  நாட்டில் இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...