Vinothan 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் கட்டாய புதிய நடைமுறை நாளை முதல் அமுல்!

Share

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் மன்னார் மாவட்டத்தில், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இம்முறையானது மன்னாரில் நடைமுறைக்கு வருகிறது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னாரில் தற்போதுள்ள காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாகக் காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

கொவிட் தொற்று அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது, சுகாதார நடை முறைகளைக் கடைப்பிடிக்காது செயற்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாகவே அமைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை(15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நடவடிக்கை குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபடுவார்கள்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும், இதுவரை மன்னார் மாவட்டத்தில் 2,685 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 671cb473e1c4c
செய்திகள்இலங்கை

சுற்றுலாத் தலங்களில் இரட்டைப் பாதுகாப்பு: சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸ் கண்காணிப்புத் தீவிரம்

பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள காவல்துறை...

691cc63de4b0849d3c3c4866
செய்திகள்உலகம்

நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில்...

image c40cb1ef0e
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில்: விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணை...

b7vbk6bo sheikh hasina 625x300 29 March 25
செய்திகள்உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வங்கதேசம் இன்டர்போல் உதவியை நாடுகிறது!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வருவதற்காக, பங்களாதேஷ் அரசாங்கம் இன்டர்போலின்...