20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

Share

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம் எனத் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாளாக’ (கரி நாள்) அனுஷ்டிக்கும் போராட்டங்களுக்கு ரெலோ கட்சி முழுமையான ஆதரவை வழங்குகிறது.

இலங்கை சுதந்திரமடைந்து பல தசாப்தங்கள் கடந்தாலும், தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. சிங்கள மக்களுக்கே அந்தச் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஈழத் தமிழர்கள் இன்றும் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், தமிழ் மக்கள் இன்னும் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...