26 6980895903656
செய்திகள்இலங்கைபிராந்தியம்

12 ஆண்டுகால நீதிப் போராட்டம்: புதுக்குடியிருப்பு இளைஞன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 11-ஆம் திகதி.உடையார்கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் (19 வயது) என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பகல் 12 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

மரண தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌனம் காக்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...