26 697ca2dd2f039
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: ஜனாதிபதியின் 5-ஆவது பரிந்துரையை இன்று பரிசீலிக்கிறது அரசியலமைப்பு சபை!

Share

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி கடந்த பத்து மாதங்களாக வெற்றிடமாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்குத் திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநர் டபிள்யூ.எம்.கே.ஜி. விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தப் பரிந்துரையை ஆராய்வதற்காகச் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை நேற்று (30) பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. எனினும், இதன்போது இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், குறித்த பெயரை மீண்டும் பரிசீலிக்க அரசியலமைப்பு சபை இன்று (31) மீண்டும் கூடவுள்ளது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன ஏப்ரல் 2025 இல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியாகியது.

இதற்கு முன்னர் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நான்கு பெயர்களையும் அரசியலமைப்பு சபை நிராகரித்திருந்தது. இது ஜனாதிபதி முன்மொழியும் ஐந்தாவது பெயராகும்.

தர்மபால கம்மன்பில பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றினார். எனினும், ஒரு பதில் பதவியை இரண்டு முறைக்கு மேல் நீடிக்க முடியாது என்ற சட்ட விதியின் காரணமாக, அவரது சேவை நீட்டிப்புக்குச் சபை அனுமதி வழங்கவில்லை. இதனால் டிசம்பர் 06 முதல் பதில் பதவியும் காலாவதியாகியுள்ளது.

ஜனாதிபதியால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள விக்ரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநராகப் பணியாற்றி வரும் இவரை, அரசியலமைப்பு சபை ஏற்குமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும்.

கணக்காய்வாளர் நாயகம் போன்ற முக்கிய அரசியலமைப்புப் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருப்பது, அரச நிறுவனங்களின் நிதி மேலாண்மை மற்றும் கணக்காய்வுப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

 

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...