பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் பேட்டி ஒன்றின் போது கூறுகையில்,
விஜய் ஒரு சூப்பர் ஹீரோ என்றும் அவரது நடனம் யாராலும் ஆட முடியாது. ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவருடைய நடனம் மிகப்பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியது.
எப்படிப்பட்ட நடன அசைவுகளையும் இலகுவாக கற்றுக்கொண்டு அதனை அப்படியே தனது நடனத்தில் கொண்டுவந்துவிடுவார். அதுமட்டுமல்லாமல் மிகச் சிறந்த நல்ல மனிதர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது துல்கர் சல்மான், ஹேய் சினாமிகா’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
#CinemaNews
Leave a comment