WhatsApp Image 2021 11 12 at 2.06.30 PM
செய்திகள்அரசியல்இலங்கை

வரவு-செலவுத் திட்டம் 2022: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்!!!

Share

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிரதான விடயங்கள்;

* அரச செலவீனங்களைக் குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை

* மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை முன்வைப்பு.

* அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

* அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக அதிகரிக்கப்படுகிறது.

* அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.

* விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், தேசிய விவசாயத்தை மேம்படுத்தவும் விசே வேலைத்திட்டம்.

* ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கிடூ.

* பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 10 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு

*அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 5 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு

* கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணமாக 700 மில்லியன்

* கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான மொத்த சிறு மத்திய வியாபாரங்களை மேற்கொள்வோர் நலன் கருதி 5000 மில்லியன் ஒதுக்கீடு

* பாடசாலை மூடப்பட்டத்தால் பாதிக்கப்பட்ட, பேருந்து, வான் உரிமையாளர்களுக்கு நிவாரணத்திற்கு 400 மில்லியன் ஒதுக்கீடு

* கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காக, 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...