Accident
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று காலை சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Share

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்னால், துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சிறுவன் பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் குடை பிடித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை காற்றுக்கு குடை மடிந்தவுடன் வீதி மறைத்துள்ளது.

இதனால் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...