MediaFile 3 1
ஏனையவை

பொரள்ளையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் இருவர் கைது!

Share

கொழும்பு, பொரள்ளை சஹஸ்புர பகுதியில் பொலிஸ் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று (02) வெள்ளிக்கிழமை இரவு பொரள்ளை பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.

பொலிஸ் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்றதால், அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். எனினும், பின்னால் அமர்ந்து பயணித்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், அவரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேயாங்கொடை பகுதியில் வைத்து இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...