images 7 6
இலங்கைஅரசியல்செய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று (24) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தினால் மீண்டும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் இருந்த அர்ச்சுனா, நேற்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணைக்கு இணங்க இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை மீண்டும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா, சபையில் தனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...