hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

2023 இல் ஆட்சி கவிழும்!! – ஹிருணிகா சபதம்

Share

“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.”

இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா.

கடுவலை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கடுவலை தொகுதியில் மொட்டு கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளனர். நான் ஒரு பெண்ணாக இங்கு வந்துள்ளேன். இந்த கோட்டையையும் நிச்சயம் கைப்பற்றுவோம். 2025 வரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் ஆட்சி மாற்றம் இடம்பெறும்.

எமது தலைவர் சஜித்தை ஜனாதிபதியாக்கி மக்கள் ஆட்சியை மலரச்செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ” – என்றார்.

அதேவேளை, ஜனநாயக விரோத வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இக்கூட்டத்தில் பங்கேற்று அறைகூவல் விடுத்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...