parliament of sri lanka 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடர் மீட்பு: ரூ.500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை (Supplementary Estimate) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாள் விவாதத்தின் நிறைவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நிவாரணப் பணிகள் குறித்துப் பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

டிட்வா பேரிடரால் ஏற்பட்ட சொத்து இழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி தற்போது கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் 100% ஆரம்பக்கட்ட நிவாரண நிதிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் இன்னும் நிவாரண நிதி சென்றடையவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தகுதியுடைய அனைத்துக் குடும்பங்களுக்கும் பாரபட்சமின்றி உரிய நிவாரணம் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என உறுதியளித்தார்.

இந்த பாரிய நிதி ஒதுக்கீடானது வீடுகளைப் புனரமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளைச் சீர்செய்தல் மற்றும் விவசாயிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...