7003785 rain
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: 8 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; சோமாவதிய யாத்திரையைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

Share

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஆற்றின் கரையோரத் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுகிறது:

திருகோணமலை மாவட்டம்: கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில.
பொலன்னறுவை மாவட்டம்: வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, திம்புலாகல.
மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரைக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

சோமாவதிய ரஜ மகா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மகாவலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...

body
இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம்!

நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின்...

Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...