241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

Share

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை லண்டன் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம் தேடிச் சென்ற 60-இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியாவில் பிரித்தானிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர். இது சட்டவிரோதமானது என கடந்த ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளர் (BIOT Commissioner) லண்டன் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். எனினும், அவர் முன்வைத்த நான்கு காரணங்களையும் நிராகரித்த நீதிபதிகள், பழைய தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், நீண்ட காலமாகச் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்த 60-இற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை (Millions of Pounds) இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிரித்தானிய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீவில் தமிழர்களைத் தடுத்து வைத்திருந்தமைக்காக ஏற்கனவே பிரித்தானிய வரி செலுத்துவோரின் பெருமளவிலான பணம் செலவிடப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இந்த நீதி, புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...