MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

Share

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (17) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்திற்குள் சில வெறுமையான தோட்டாக்கள் (Empty Shells) கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் வைத்தியர்கள், தமக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர்களின் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வெளிநோயாளிப் பிரிவு மற்றும் ஏனைய கிளினிக் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வைத்தியசாலை அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...