images 4 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கந்தளாயில் கைது!

Share

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவி ஒருவரை, கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரைப் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி. இவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஒரு பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன். ஏனைய மூவரும் அவரது நண்பர்கள். பிரதான சந்தேக நபரான மாணவன், டிக்டொக் செயலி மூலம் பாதிக்கப்பட்ட மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார்.

டிக்டொக் மூலம் அறிமுகமான மாணவன், நேரடியாகப் பேச வேண்டும் எனக் கூறி, மாணவியைச் லங்கா பட்டுன விஹாரைக்குப் பின்னால் உள்ள கடற்கரைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். மாணவியும் மாணவனும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த மாணவனின் மூன்று நண்பர்களும் அங்கு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் மாணவியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஈச்சலம்பற்றுப் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சலம்பற்றுப் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...

Bogambara
இலங்கை

புதிதாக மாறும் பழைய சிறைச்சாலை – காரணம் என்ன?

மீண்டும் ஒரு சிறைச்சாலையாக பழைய போகம்பரை சிறைச்சாலையை ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி...