25 6938115554743
இலங்கைசெய்திகள்

அவசர நிவாரணம் வழங்கிய அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி!

Share

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமைக்கு மத்தியில் இலங்கையுடன் நின்று, தேவையான உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

தேவையான நேரத்தில் தக்க உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் (Donald Trump) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாகப் பேரிடர் நிலைமைக்கு இலங்கை முகங்கொடுத்த சந்தர்ப்பத்தில், அமெரிக்கா விரைவாக C-130 வகையிலான இரண்டு நிவாரண விமானங்களை இந்நாட்டிற்கு அனுப்பியதுடன், இரண்டு மில்லியன் டொலர் (US$ 2 Million) அவசர நிதி நிவாரணத்தையும் வழங்கியிருந்ததாக அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பதிவில்,”இவ்வாறு பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், நமது மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது.”குறிப்பிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...