image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

Share

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம் கார்டுகள் மற்றும் ஏராளமான மொபைல் போன் பாகங்கள் உட்படத் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

பூஸா முகாமின் அதிகாரிகள், காலிச் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் இரண்டு முழுமையான ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைத்தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட 13 சிம் அட்டைகள் (SIM Cards) அடங்கும்.

சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்துபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...