DvCJCaNVsAIF LG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வான் பாயும் குளங்கள்!! – குளங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Share

நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் எனவும், பெற்றோர்கள், சிறுவர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராமங்களில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த பகுதிகளுக்கு சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு கிராம அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், விசேடமாக சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...