DvCJCaNVsAIF LG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வான் பாயும் குளங்கள்!! – குளங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Share

நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் எனவும், பெற்றோர்கள், சிறுவர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராமங்களில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த பகுதிகளுக்கு சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு கிராம அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், விசேடமாக சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...