DSC 8266
செய்திகள்இலங்கை

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறையில் பரபரப்பு: உணவுத் தட்டில் மறைக்கப்பட்ட கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Share

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த கைதி ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர், தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சகோதரன் ஆவார்.

சிறைச்சாலையில் உள்ள உணவுத் தட்டில் (Food Plate) மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் உடனடியாகத் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...