Padme
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் பத்மேவின் கறுப்புப் பணம் நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்படுகிறதா? – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Share

பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பத்மேவைச் சந்தித்த தென்னிலங்கை நடிகை ஒருவர், அவரைத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில், துபாயில் தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

:இந்தப் புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகைகள் தொடர்பில் CID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கெஹல்பத்தர பத்மேவின் கறுப்புப் பணம் (Black Money) குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா (Money Laundering) என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல தென்னிலங்கை நடிகைகள் இது தொடர்பில் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...