25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

Share

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பூஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் (அல்லது ருவன் ஜெயசேகர) மீது பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

லசந்த விக்ரமசேகர கொல்லப்படுவதற்கு முன்னர், மிதிகம ருவான் என்பவரால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகப் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

பொலிஸார் சந்தேகிக்கையில், விக்ரமசேகர வழங்கிய தகவலின் அடிப்படையில் மிதிகம ருவானின் இரண்டு உதவியாளர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமைக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம்.

கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகர, ஆகஸ்ட் 29, 2025 தேதியிட்ட கடிதத்தில் “சமூக ஊடகங்கள் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிதிகம ருவான் அல்லது ருவன் ஜெயசேகர என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு குறித்துத் தனக்குத் தெரியும். பல்வேறு நபர்களின் பெயர்களை வெளியிட்டு, ‘நான் அவர்களின் நெருங்கிய நண்பர்’ என்று கூறி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டன. நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது அல்லது பிரதேச சபையை விட்டு வெளியேறும் போதும் என்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதனை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...